தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவர் சுரேஷ் சாலே, வாய்மூலமாக மட்டுமே உணவை உட்கொள்வதை மறுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மற்ற மருத்துவ முறைகள் மூலம் வழங்கப்படும் ஊட்டச்சத்தை அவர் மறுக்கவில்லை என்றும், அவ்வாறு அனைத்தையும் மறுத்திருந்தால் இத்தனை நாட்கள் எவராலும் உணவு இன்றி உயிர்வாழ முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர், முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவர் மேற்கொண்டு வரும் இந்த முயற்சி எந்தப் பயனும் அளிக்காத செயல் எனக் குறிப்பிட்டார்.
எனவே, அவர் செய்ய வேண்டியது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், அதற்கு உண்மையாக ஆதரவளித்தவர்கள் மற்றும் அந்தக் குற்றங்கள் தொடர்பான தகவல்களை மறைக்காமல், சட்டத்தின் முன் அவற்றை வெளிக்கொணர்வதே என அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தினார்.