Print this page

எரிபொருள் விநியோக QR முறை நீக்கம் குறித்து ஆய்வு

எரிபொருள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறையை நீக்குவது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்த வேகத்துடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு எரிபொருள் விலைகள் அதே அளவில் குறைக்கப்படவில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது எரிபொருள் கொள்வனவு செய்வதில் எந்தவித தடையும் இல்லையெனவும், தேவையான அளவில் எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.