Print this page

தற்கொலைத்தாரிகளின் கணக்கு விவரங்களை கேட்டது கோட்

கொழும்பு சினமட் கிரான்ட் ஹோட்டலில், தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் இம்ரான், அவருடைய மனைவி, அவர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் சந்தேகநபர்களில் சிலரின் கணக்கு வழக்குகள் தொடர்பிலான விவரங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒப்படைக்குமாறு, கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க, அரச, தனியார் வங்கிகள் சிலவற்றுக்கு, நேற்று (10) உத்தரவிட்டார்.