Print this page

எதிர்ப்பார்கிறார் மைத்திரி, உறுதியளித்தார் ரணில்

யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நுவரெலியாவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசாங்கம் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இன்னும் ஐந்து மாதங்களில், புதிய அரசாங்கமொன்று உருவாகும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நுவரெலியா வைத்தியசாலைக்கான புதியக் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு,  நேற்று (15) இடம்பெற்றபோது, அக்கட்டிடத்தை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் 125ஆம் ஆண்டு நிகழ்வு, பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்னும் 2 வருடங்களுக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, அரசியல் தீர்வொன்று எட்டப்படும் என்றார்.

Last modified on Tuesday, 16 July 2019 02:29