Print this page

சுற்றுலா பயணி உயிரிழப்பு - விசாரணைகள் ஆரம்பம்

 


அம்பலாந்தோட்டை, உஸ்ஸன்கொட சுற்றுலா முகாமுக்கு சென்றிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலாக் குன்றுக்கு சென்ற இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

குறித்த நபர் அம்பலாந்தோட்டை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சுற்றுலா முகாம் கடந்த 09ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சுமார் 70 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் பங்கெடுத்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.