Print this page

பணிப்புறக்கணிப்பு தோல்வி

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தால், நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆசிரியர்கள் சங்கமும் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்திருந்த நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கம் இவ்வாறான பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு அனைத்து ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை காட்டிக்கொடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை ஆசிரியர்கள் சங்கமானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த ஒரு தொழிற்சங்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.