Print this page

மொட்டுடன் பல கட்சிகள் இன்று சங்கமம்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும், மேலும் சில கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்காக 10 கட்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக்காக சிறிலங்கா பொதுஜன முன்னணி, 29 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், அவற்றில் 10 கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Last modified on Friday, 26 July 2019 03:13