Print this page

ஜனாதிபதி வேட்பாளர் 18 இல் களமிறக்கம்

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த மாதம் 18ஆம் திகதி அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் இடம்பெறும் கூட்டத்தின் போது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என, மக்கள் விடுதலை முன்னணியின்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அமைப்பினரால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் டில்வின் சில்வா இதனைக் கூறியுள்ளார்.

Last modified on Saturday, 07 September 2019 12:42