Print this page

ஐ.தே.கவுக்குள் குழப்பம்

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் உறுதியான தீர்மானம் இன்மையால், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கூட்டணியை அமைப்பதில் தனக்கு 100க்கு நூறு வீதம் ஆட்சேபனை இல்லையென்றும், எனினும், ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவிக்கவேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கின்றார் என தகவல்கள் தெரிவித்தன.

எனினும், தன்னுடைய நிலைப்பாடு தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை விடுத்திருக்கும் சஜித் பிரேமதாஸா, ஜனாதிபதி வேட்பாளர் யாரென அறிவித்துவிட்டு, கூட்டணியை அமைக்குமாறு அவ்வறிக்கையின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார். 

Last modified on Friday, 09 August 2019 16:39