Print this page

கொழும்பில் பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தானின் 73ஆவது சுதந்திர தினம் கொழும்பில் இன்று (14) கொண்டாடப்பட்டது

பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தானிய சமூகமும் இணைந்து பாக்கிஸ்தானின் சுதந்திர தினத்தை கொண்டாடியது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷஹீட் அஹமட் ஹஷ், பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றி விழாவை ஆரம்பித்துவைத்தார்.

அத்துடன், சுதந்திர தினம் தொடர்பான பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்தியையும் அவர் வாசித்தார்.