Print this page

சுப நேரம் விசாரிக்கும் சஜித் பிரேமதாச

பிரதமராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி நியமிக்கவுள்ளதாக தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் அமைச்சர் சஜித் பிரதமராக பதவிப்பிரமானம் செய்வதற்கான சுப நேர விசாரணைகளை செய்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்