Print this page

அடம்பிடித்த மு.கா இருவருக்கும் பதவி

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் தங்களுடைய பதவிகளை இராஜனாமாச் செய்திருந்த முஸ்லிம்களில், மீதமிருந்த மேலும் இருவரும் தங்களுடைய பதவிகளை இன்று (23) மீளவும் பெற்றுக்கொண்டனர். 

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோரே தமது இராஜாங்க அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.