Print this page

அது பொய் என்கிறார் கரு

தான், சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். 

சபாநாயகர் பதவியை இராஜினாமா  செய்வதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதற்கு எவ்விதமான காரணங்களும் இல்லை என்றும் அவர் கூறினார். 

கரு ஜயசூரியவை சிக்கலுக்கு உள்ளாக்கும் முயற்சிகளில் ஈடுபடும் ஒரு குழுவினரினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளே இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது.