Print this page

பள்ளிவாசல் மேல்மாடி எரிந்து நாசம்

 

திஹாரிய ஜுனைட் மாவத்தையிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலின் இரண்டாவது மாடியில் இன்றுக்காலை ஏற்பட்ட தீ விபத்தில், அது முற்றாக எரிந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். 

கல்வி நிறுவனத்தின் தங்குமிட விடுதியே இவ்வாறு தீயில் எரிந்து முழுமையாக நாசமடைந்துள்ளது. 

இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட போதிலும், அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அவ்விடத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டமையால், மாணவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

உயர்க்கல்வியை பயிலும் நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த மாணவர்கள் 35 பேர் அங்கு தங்கியிருந்து கல்விக்கற்று வந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தை கேள்வியுற்றதன் பின்னர், உடனடியாக விரைந்து செயற்பட்ட கம்பஹா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

 

தீ பரவியமைக்கான காரணம் எதுவும் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை. எனினும், இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.