Print this page

கோத்தாவுக்கு 2 பேச்சாளர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பேச்சாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹலிய ரம்புக்வெல மற்றும் டளஸ் அழகபெரும ஆகிய இருவரே, பொதுஜன பெரமுனவின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.