Print this page

சஜித்தின் பேரணி ஆரம்பம்

September 05, 2019

மைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரி குருணாகலில் தற்போது பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

"சஜித் வருகின்றார்" என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி இடம்பெற்று வருகின்றது.

குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் இடம்பெற்று வரும் இது சஜித் பிரேமதாஸவின் மூன்றாவது பேரணியாகும்.

இந்த பேரணியில் சுஜீவ சேனசிங்க, துஷார இந்துனில், நளீன் பண்டார, ஜே.சி அலவத்துவல, அஷோக் அபேசிங்க மற்றும் இந்திக பண்டார ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.