Print this page

பிள்ளையானை சந்தித்தார் பெருமாள்

September 10, 2019

வடகிழக்கு மாகாண முன்னாள்  முதலைமைச்சர் வரதராஜ பெருமாள் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தலைர் சிவநேசதுரை சந்திரகாந்தனை  திங்கட்கிழமை(9) சந்தித்துள்ளார். 

மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்றே பிள்ளையானை அவர் சந்தித்துள்ளார். 

இச்சந்திப்பின் போது அரசியல் உள்ளிட்ட பலவிடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது. 

இச் சந்திப்பின் போது முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் குகன்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.