Print this page

டொபி திருடிய சின்ன பிக்குகள்- “உடியா”வுக்கு சிறை

September 11, 2019

கடையொன்றி இரண்டு டொபிகளை திருடிய, இரண்டு சின்ன பிக்குகளை கன்னங்களில் அறைந்து, அவர்கள் இருவர் மீதும் கடுமையாக தாக்கினார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த கடையின் முதலாளி, கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சின்ன பிக்குகள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது.

இந்த சம்பவம் ஹொரவப்பொத்தானை பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. 

அந்த கிராமத்தில் கடையொன்றை நடத்தும் உடியா என்றழைக்கப்படும் சமிந்த கலபொட என்பவரே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

Last modified on Wednesday, 11 September 2019 20:07