Print this page

பைல்களை புரட்டுகிறார் ரணில்

September 12, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பிரபலங்களின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் நடவடிக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளார் என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி பிரபலங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பில் பிரதமரிடம் வினவியபோதே, ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ சகல தகவல்களும் கிடைத்துள்ளது. நேரம் வரும்போது, சகல தகவல்களையும் அம்பலப்படுத்துவேன்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

 

Last modified on Thursday, 12 September 2019 02:21