Print this page

விசேட அறிவிப்பை விடுகிறார் கரு

September 18, 2019

பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்திலிருந்து, சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய அறிவிப்பை விடுத்ததையடுத்து, தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்வார் என்றும் அறியமுடிகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, கரு ஜயசூரியவின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்தே, அவர் விசேட அறிவிப்பை விடுப்பார் என அறியமுடிகின்றது. 

இன்னும் இரண்டுடொரு நாட்களில் அல்லது அடுத்தமாதம் முதல் வாரத்தில் முக்கிய அறிவிப்பை விடுப்பார் என அறியமுடிகின்றது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை அடுத்தே, ஐக்கிய தேசியக் கட்சியின் சிக்கல் தீ்ர்க்கப்படுமென அறியமுடிகின்றது.

அதற்குப் பின்னரே, கருஜயசூரிய முக்கிய அறிவிப்பொன்றை விடுப்பார். 

Last modified on Wednesday, 18 September 2019 00:55