Print this page

“அனர்த்தமா? அஞ்சாதீர்கள்”

September 24, 2019

உடன் அழையுங்கள் அனர்த்த நிலைகள் தொடர்பில் அறிவிப்பதற்கு, அவசர உதவி தொலைபேசி இலக்கங்களை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, 0112587229 மற்றும் 01122454576 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக, அனர்த்தங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் அறிவிக்க முடியும்.

இதேவேளை, விசேட பயிற்சிப்பெற்ற உயிர்காப்பு மற்றும் அனர்த்த உதவி பொலிஸ் அதிகாரிகள் 150 பேர், தலா 50 பேர் கொண்ட மூன்று குழுக்களாக, காலி மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அனர்த்த உதவிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 50 படகுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.