Print this page

ஐ.தே.கவின் அடுத்தக்கட்ட நகர்வு

September 27, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை, கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்தார்.

அதன்படி,

1. ஐக்கிய தேசிய முன்னணியின் அமைப்பாளர் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

2.கட்சியின் சம்மேளனம், ஒக்டோபர் 3 ஆம் திகதியன்று, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில், காலை 10 மணிக்கு நடைபெறும்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்ட நிலையில் கட்சியின் சம்பிரதாயத்துக்கு அமைய இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

3. தேர்தல் பிரசார பணிகளின் ஆரம்பம், எதிர்வரும் 10 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு, காலி முகத்திடலில் நடத்தப்படும். 

Last modified on Friday, 27 September 2019 02:58