Print this page

‘கூட்டமைப்பு இறுதி தீர்மானம் எட்டவில்லை’

September 29, 2019

 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், இதுவரையிலும் எவ்விதமான தீர்மானங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவில்லை என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே இறுதித் தீர்மானத்தை எடுப்போம் என்றார்.

முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Last modified on Sunday, 29 September 2019 16:49