Print this page

‘ஜனாதிபதி சம்பளத்தை நான் வாங்கமாட்டேன்’

 
தான் ஜனாதிபதியானால் தனக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை நாட்டின் வறுமையை நீக்க வழங்குவேன். ஜனாதிபதி மாளிகையை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றுவேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
 
கொழும்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று (02) நடாத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
 
"அமைச்சருக்கான கொடுப்பனவு, சம்பளம், இதர கொடுப்பனவுகளை நான் பெற்றுக்கொள்ளவில்லை. வீட்டு வாடகையைக் கூட பெற்றுக்கொள்ளவில்லை” என்றார்.
 
பொதுமக்களின் துன்பங்களை நன்கு அறிந்த அவர்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்வினை ஆட்சியாளர்கள் வாழ்கின்றனர் என்றார். அனைத்து தரப்பினருக்கும் ஒரு முன்னுதாரணமான தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளளேன்” என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
 
 
 
Last modified on Wednesday, 02 October 2019 18:45