Print this page

மொட்டை கைவிடுகிறார் புஞ்சி

முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மட்டுமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற பலரும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர்களான அத்தாவுட செனவிரத்ன மற்றும் டி.கே.பி ஏக்கநாயக்க ஆகிய இருவரும் சஜித் பிரேமதாஸவுடன் நேற்று (02) இணைந்துகொண்டனர்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமேயும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை கைவிட்டு, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.

அந்த செய்திகளை மறுத்துள்ள புஞ்சிநிலமே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட தலைவராக இருந்து கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

Last modified on Thursday, 03 October 2019 02:53