Print this page

புலமைபரிசில் பெறுபேற்றில் முதலிடம் இல்லை

2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (06) மாலை வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். பெறுபேற்றை இணையளத்தளத்தில் தரவேற்றுவதற்கு, ஒருவாரகாலம் தாமதமாகும் என நேற்று (05) தகவல்கள் வெளியாகியிருந்தன.

பெறுபேறுகளை, http://doenets.lk என்ற இணையளத்தளத்தில் பார்வையிடலாம். தரப்படுத்தல் இம்முறை அறிவிக்கப்படாது.

எனினும், புள்ளிகள் மற்றும் மாவட்ட வெட்டுப்புள்ளி மட்டுமே, அறிவிக்கப்படும் என பூஜித ஜயசுந்தர மேலும் தெரிவித்தார். இதுவரையிலும் 11 ஆயிரம் பேர் மட்டுமே புலமைப்பரிசில் பெற்றனர்.

அந்த மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை 20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில், 500 ரூபாவிலிருந்து 750 ரூபாய் வரைக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Last modified on Sunday, 06 October 2019 05:55