Print this page

சு.க தீர்மானித்தது- த.தே.கூ தடுமாறுகிறது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கே ஆதரவளிக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீர்மானத்தை இன்றிரவு எடுத்துள்ள சுதந்திரக் கட்சி, உத்தியோகபூர்வமாக நாளை அறிவிக்கவுள்ளது.

இதேவேளை, எந்த வேட்பாளருக்கு தாம் ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் எடுக்கவில்லை.

பாராளுமன்றக் கட்டத்தொகுதியில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

கூட்டத்தை அடுத்தவாரம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. 

Last modified on Tuesday, 08 October 2019 16:37