Print this page

கொழும்பில் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி

கொழும்பு, ஜம்பட்ட வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாக நபர்கள் இருவர், இன்னுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதில் காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னரே, அவர் மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

Last modified on Tuesday, 08 October 2019 16:54