Print this page

இருவர் இருக்கும் “கூண்டு” மிகப் பயங்கரமானது

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணைக் கட்டளை நிராகரிக்கப்பட்டதன் பின்னர், கைது செய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகிய இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு, இருவர் பாதுகாப்பு கடமைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட அந்த வாட்டில்தான், வெலிக்கடை சிறைக்கலவரத்துக்கு காரணமாக இருந்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையளார் எமில் ரஞ்ஜன் மற்றும் பொலிஸ் பரிசோதகர் நியூமால் ரங்கஜீவ ஆகிய இருவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதனால், ஹேமசிறிக்கும், பூஜித்தவுக்கும் கடுமையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது. 

 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மேற்படி இருவரும், பிணையில் விடுக்கப்பட்டதன் பின்னர் பிணை நிராகரிக்கப்பட்டு மீண்டும் நேற்று (09) கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Last modified on Thursday, 10 October 2019 03:08