Print this page

கையடக்க தொலைபேசியில் படம் பிடித்தவர் கைது

வாக்குச்சீட்டை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம் பிடித்தார் என்றக் குற்றச்சாட்டில், வாக்குச்சாவடிக்குள் வைத்தே ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் பொலிஸ் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

அவரை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தேர்தல்கள் சட்டத்தை மீறியக் குற்றச்சாட்டின் கீழ், வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர். 

எல்பிட்டிய பிரதேச சபைக்காக நடத்தப்பட்ட வாக்களிப்பில், தலகஸ்பே வாக்களிப்பு நிலையத்தில் வைத்தே, நேற்று மாலை 3 மணியளவில் இவ்வாறு படம்பிடித்துள்ளார். 


Last modified on Saturday, 12 October 2019 05:40