Print this page

ஈழத்தை அறிவித்தவருடன் மஹிந்த சந்திப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, வடகிழக்கை தமிழீழமாக பிரகடனப்படுத்திவிட்டு, நாட்டைவிட்டு தப்பியோடியவருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கும், மஹிந்தவுக்கும் இடையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதன்போது, தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை திரட்டிக்கொள்ளும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Last modified on Friday, 18 October 2019 01:54