Print this page

சஜித்துக்காக வடக்கை பொறுப்பேற்றார் சந்திரிகா

November 03, 2019

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க,  வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் வடக்கின் பல அரசியல்வாதிகளுடன் சந்திரிகா தற்போது பல தீர்க்கமான பேச்சுவார்த்தைகளையும் நடாத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக தேசிய முன்னணியுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பல ஒப்பந்தங்களைச் செய்யும் நிகழ்வு நேற்று முன்தினம் (01) கொழும்பில் இடம்பெற்றதோடு, முன்னாள் ஜனாதிபதியும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.  

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களோடு முன்னாள் ஜனாதிபதியுடன் மேடையில் அமர்ந்திருந்த போதிலும் கூட்டத்தில் அவர் உரையாற்றவில்லை.