Print this page

துப்பாக்கிச் சூட்டுக்கு கோத்தா வருத்தம்

November 06, 2019

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் பாதுகாவலர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் உண்மையாயின் அது தொடர்பில் உரிய தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது டுவிற்றர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், சட்டம், நீதியை நிலைநாட்டுவதற்கு தான் ஒருபோதும் பின்நிற்க போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Last modified on Wednesday, 06 November 2019 19:10