Print this page

நாட்டை பிரிப்பதற்கே TNA இன் ஆதரவு- கோத்தா

November 08, 2019

நாட்டை பிரிக்கும் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. அந்த கூட்டமைப்பே வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்தனர் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நிபந்தனைகள் இன்றி, சஜித் பிரமேதாஸவுக்கு ஆதரவளித்துள்ளது.

இந்நிலையில், இரத்தினபுரியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, கோத்தாப ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Last modified on Friday, 08 November 2019 00:47