Print this page

தாமரை மொட்டின் உறுப்பினர் கைது

November 13, 2019

தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

ஹோமாகம பிரதேச சபையின் உறுப்பினர் நிஹால் ஹேவாவசம் என்பவரே, மீகொட பொலிஸாரினால் நேற்று (12) கைதுசெய்யப்பட்டார்.

வாக்குச்சீட்டுகளின் மாதிரியை விநியோகித்தார் என்றக் குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்