Print this page

சஜித்தின் ஆதரவாளர் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு

November 13, 2019

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர் வீட்டின் மீது பெற்றோல் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, வாகரையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பெற்றோல் குண்டை வீசி அந்த சந்தேகநபர், பிள்ளையான் அணியைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது. வீட்டின் உரிமையாளர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார் என அறியமுடிகின்றது.