Print this page

தாயை வன்புணர்ந்த மகன் கைது

November 13, 2019

தனது தந்தை இல்லாத நேரத்தில், தனிமையில் வீட்டிலிருந்த தனது தாயை, இரண்டு தடவைகள் வன்புணர்ந்த அவருடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது 61 வயதான தாயை வன்புணர்ந்த 41 வயதான திருமணம் முடிக்காத நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வறக்காபொல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

வன்புணர்வுக்கு உள்ளான அந்த தாயின், கணவன் மினுவாங்கொடை பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் தங்கியிருந்து வேலைசெய்கிறார்.

மாதத்துக்கு ஒருமுறையே அவர் வீட்டுக்கு சென்றுவருவார். 

வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், கூலித்தொழிலாளி ஆவார். மூவரும், ஒரே வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர் என பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று, அவருடைய தாய், மகனுக்கு சாப்பாட்டை தயாரித்து வைத்துவிட்டு, மகனுக்காக காத்திருந்துள்ளார்.

வீட்டின் முன்கதவை அரைவாசிக்கு திறந்துவைத்து, முன் அறையில், பாயை விரித்து படுத்திருந்துள்ளார். 

போதைக்கு அடிமையான அந்த நபர், அன்றையதினமும் கடும் போதையில் வந்து, தாயையும், தந்தையும் தூசனத்தால் ஏசியுள்ளார்.

அதன்பின்னர் தூங்கிவிட்ட அந்த நபர், நடுசாமத்தில் தாயை முதலாவது தடவையாக வன்புணர்ந்துள்ளார். 

அதற்குப் பின்னர், இரண்டொரு மணிநேரத்துக்குப் பின்னர், தாயிடம் வந்து, கொலை செய்யபோவதாக அச்சுறுத்தி மீண்டும் வன்புணர்ந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் வறக்காபொல பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபர், கேகாலை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தாயை வன்புணர்ந்த அந்த நபர், போதைக்கு அடிமையானவர் என்பதுடன், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தகவல்கள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவித்தனர்.