Print this page

புலிப் பாடலை ஒளிபரப்பியவர் கைது

November 13, 2019

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்புவதற்கு  முயன்றவர், கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம்அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் நடைபெற்றது. இன்று மாலை 3 மணிக்கு ஏற்பாடாகியிருந்தது,

இந்நிலையில்,  விடுதலைப் புலிகள் அமைப்பின், புரட்சிப் பாடலொன்று திடிரென ஒலிபரப்பப்பட்டது.


இதுதொடர்பில், கல்முனை பொலிஸாரின் கவனத்துக்கு உடனடியாக ​கொண்டுவரப்பட்டதையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார்,  ஒலிபரப்பு ஒழுங்குகளை மேற்கொண்ட இளைஞனைக் கைது செய்தனர்.

Last modified on Wednesday, 13 November 2019 15:33