Print this page

3 உயர் பதவிகளுக்கு மூவர் நியமனம்

November 19, 2019

மூன்று உயர்பதவிகளுக்கு நியமிப்பிப்பதற்கு, மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும்.

ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி பி.பீ  ஜயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் திறைச்சேரியின் செயலாளராக பேராசிரியர் எஸ்.ஆர். ஆர்டிகல ஆகியோரே நியமிக்கப்படவுள்ளனர்.