Print this page

மஹிந்த இராஜினாமா- கோத்தாவுக்கு கடிதம்

November 29, 2019

 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த ​தேசப்பிரிய, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

தனது இராஜினாமா கடிததத்தை அவர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கு தாமதமாகியுள்ளமையால், இந்த தீர்மானத்தை தான் எடுத்ததாக, அந்த இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் ஆகும். அதனடிப்படையில், மஹிந்த தேசப்பிரிய இந்தப் பதவியில், 2020 வரையிலும் இருக்கலாம்.

இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதன் பின்னர், அது அரசியலப்பு பேரவைக்கு அனுப்பிவைக்கப்படும். அரசியலமைப்பு பேரவை தீர்மானம் ஜனாதிபதிக்கு மீளவும் அனுப்பிவைக்கப்படும். அதன் பின்னரே, தீர்மானமொன்று எட்டப்படும். இதுவே, சாதாரண சம்பிரதாயமாகும்.

Last modified on Tuesday, 03 December 2019 01:16