Print this page

‘துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கவும்’

முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரன் படுகொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

அதேபோல, அரசியல் கைதிகள் விவகாரத்தை ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்க வேண்டும்.

விசாரணைகளின் பின்னர், வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் இருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.