Print this page

மொட்டு உறுப்பினர் மீது விமல் தரப்பு தாக்குதல்

December 21, 2019

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாதிவெல நகர சபை உறுப்பினர் மீது, அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அத்துருகிரிய வல்கம வீதியிலுள்ள மதில்களில் சுவரோவியம் வரைந்துகொண்டிருந்தவர்களுக்கு, உணவு மற்றும் தேநீர் எடுத்து சென்றவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தை அடுத்து, இது தொடர்பில் அத்துருகிரிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரை தேடி, பொலிஸார்  அவருடைய வீட்டுக்கு சென்றிருந்த போதிலும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். 

எவ்வாறெனினும் சந்தேகநபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.