Print this page

விபசாரியும் ரஞ்சனும் ஓடியோவில் அம்பலம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கையடக்க தொலைபேசி உரையாடல்கள் தொடர்பிலான தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளன. 
 
அவருக்கும், குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஒலிபரப்பிக் காட்டினார். 
 
இதேவேளை, வழக்குகள் தொடர்பில் நீதவான்களிடம் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி, உரையாடும் கையடக்க தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய ஒலிப்பதிவை, அடுத்த ஊடகவியலாளர் சந்திப்பில் அம்பலப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அறிவித்துள்ளார். 
 
இந்நிலையில், 19 வயது இளம் வயது யுவதியொன்றைத் தன் வீட்டுக்கு வரவழைப்பதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி மூலம் மற்றுமொரு பெண்ணுடன் கதைக்கும் ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்கள் 'ராமநாயக்க 19 வயது விபச்சாரியை வீட்டுக்கு அழைப்பதற்காக மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு' என்று செய்தி வெளியிட்டுள்ளது
Last modified on Friday, 10 January 2020 11:51