Print this page

“சகல ஒலிப்பதிவுகளையும் அம்பலப்படுத்துவேன்”

சபாநாயகர் கரு ஜயசூரிய என்னிடம் கேட்டுக்கொண்டால், குரல் பதிவு தொடர்பில் அனைத்துத் தகவல்களையும் வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

ராமநாயக்கவின் குரல் பதிவுகள் வைரலாகியிருப்பதனால் பாராளுமன்றத்திற்குப் பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதனால், அது தொடர்பில் சபாநாயகரின் அவதானம் அவர்மீது சாய்ந்துள்ளதனாலேயே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கேள்விக் கணைகள் தொடுக்கவுள்ளார்.

மேலும், மூன்றாவது நாளாகவும் ராமநாயக்க பாராளுமன்றம் வரவில்லை.

திரைப்படமொன்றின் ஒளிப்பதிவுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தான் பாராளுமன்று வரவில்லை என ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Saturday, 11 January 2020 03:58