Print this page

“எம்.சி.சி ஒப்பந்தத்துக்கு இடமளியேன்”

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியுடன் இணைந்து, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் எனவும் சஜித் பிரேதமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.