Print this page

21/4 தாக்குதல்: ஹேமசிறிக்கு பிணை

February 05, 2020

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, ​கொழும்பு மேல் நீதிமன்றத்தால், சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தும் தகவல்களை தெரிவிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவருடன் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.