Print this page

வெள்ளவத்தைக்கு படகு சேவை

February 25, 2020

பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரை பயணிகள் படகுச் சேவை மார்ச் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வாகன நெரிசலை கருத்திற்கொண்டு இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. பத்தரமுல்ல தியத்த உயன பூங்கா அருகில் ஆரம்பமாகும் இந்த படகுச் சேவை நாவல பல்கலைக்கழகம் அருகே தரித்து பின்னர் வெள்ளவத்தை நோக்கி செல்லும்.

இதன்படி பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரை சுமார் 20 நிமிடங்களில் இந்த படகுச் சேவையில் செல்ல முடியுமெனவும் வீதிகளில் பொதுமக்கள் இதே பயணத்திற்கு ஒன்றரை மணி நேரம் வரை செலவிடுவது இதன்மூலம் தவிர்க்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இலங்கை கடற்படையுடன் ஒத்துழைப்புடன் இந்த சேவையை நடத்தவுள்ளது.