Print this page

19 வரை அரச விடுமுறை- 20க்குப் பின் தீர்மானம்

சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை அடிப்படையாகக்கொண்ட இந்த விடுமுறை நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த அரச விடுமுறையை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும்.