Print this page

மற்றுமொரு இலங்கையர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் இருவர் மரணமடைந்துள்ளனர். 

இலங்கையில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களில் ஏற்கனவே மூவர் மரணமடைந்துவிட்டனர். மற்றுமொரு இலங்கையர் மரணமடைந்துள்ளார் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் நியூயோர் மாகாணத்தில் வசித்த 50 வயதான இலங்கையரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அவர், அமெரிக்காவுக்கு சென்று நீண்ட வருடங்கள் ஆகின்றன. அத்துடன் அவருடைய குடும்பத்தினரும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றன.