Print this page

அட்டன் தரவளை இழுத்து மூடப்பட்டது

அட்டன் பொலிஸ் பிரிவு டிக்கோயா- தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

கொரோனா தொற்று அபாயம் காரணமாக அட்டன் பொலிஸார்,சுகாதார பரிசோகர்கள் மற்றும் அட்டன் டிக்கோயா நகசபை இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிக்கோயா தரவளை பிரதேத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் ஈடுபட்ட போதகர் உட்பட 08 பேர்,  கொரோனா தொற்று அபாயம் காரணத்தில்  தேவாலயத்தினுள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இந்த ஆராதணை கூட்டத்திற்கு கலந்து கொண்டவர்கள் தொடர்பில் முழுமையான தகவல் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நிலையில் குறித்த தேவாலயம் அமைந்துள்ள தரவளை கீழ்ப்பிரிவு பிரதேசம் பொலிஸாரினால் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளி பிரதேசத்திற்கு செல்வதோ வெளியார் உள்நுளைவதோ 14 நாட்களுக்கு முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பிரதேசத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்மை குறிப்பிடத்தக்கது

Last modified on Wednesday, 01 April 2020 04:30